Advertisement

U-19 உலகக் கோப்பை: ஆஸி.யை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது இந்தியா

ஆண்டிகுவா: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம், U-19 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ந்து நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற வரலாற்றை படைத்தது இந்திய அணி.

அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆங்கிரீஷ் ரகுவன்ஷி 6 ரன்களிலும், ஹரூன் சிங் 16 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த ஷேக் ரஷீத் - கேப்டன் யாஷ் துல் இணை பட்டையைக் கிளப்பியது. ஷேக் ரஷீத் 94 ரன்களைக் குவித்தார். அட்டகாச சதமடித்த கேப்டன் யாஷ் துல் 110 ரன்களைக் குவித்தார். இவர்கள் இருவரும் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments