Advertisement

'ஒவ்வோர் ஆண்டும் 75 - 80 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு' - ஐபிஎல் குறித்து ரவிசந்திரன் அஸ்வின்

சென்னை: "நீண்ட நாட்கள் கொண்ட இந்த ஐபிஎல் தொடர், சர்வதேச தொடர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் ஒவ்வொரு நாடும் ஐபிஎல்லை போன்று லீக் போட்டிகளை நடத்துகின்றன" என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேசியுள்ளார்.

ஐபிஎல் 15-வது சீசன் மார்ச் 26 அன்று தொடங்கி மே 29 அன்று முடிகிறது. கடந்த சீசன்களை காட்டிலும், இந்தமுறை அதிகபட்சமாக 74 போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்கு காரணம், புதிதாக இரண்டு அணிகள் இந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமாகவுள்ளன. இதனால் எதிர்பார்ப்புகள் அதிகமாகி இருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிசந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடர் குறித்து பேசியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments