கால்பந்து உலகில், அதிக கோல் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் போர்ச்சுக்கல்லின் கிறிஸ்டியானா ரொனால்டோ.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலீஸ் பிரிமியர் கால்பந்து தொடரில், நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிய போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ ஹாட்ரிக் கோல்களை அடித்து அசத்தினார். அவர் 2-வது கோலை அடித்த போது, தொழில்முறை கால்பந்து பிரிவில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஜோசப் பைகான் அடித்த 805 கோல்களே இதுவரை சாதனையாக இருந்த நிலையில், ரொனால்டோ அதை முறியடித்துள்ளார். அவர் தற்போது 807 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இதையும் படிக்கலாம்: மகளிர் உலகக் கோப்பையில் இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி நிகழ்த்திய புதிய சாதனை - என்ன தெரியுமா?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments