Advertisement

பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் கூடுதலாக 15 ரன்களை கொடுத்ததால் தோல்வி - லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் வருத்தம்

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூடுதலாக 15 ரன்களை கொடுத்ததால் தோல்வி அடைந்தோம் என லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி தோல்வியடைந்தது. 182 ரன்களை துரத்திய லக்னோ அணியால் 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. போட்டி முடிவடைந்ததும் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறும்போது, “பந்து வீச்சை நாங்கள் நன்றாக ஆரம்பித்தோம், முதல் ஓவரிலேயே 2 விக்கெட்களை வீழ்த்தினோம். ஆனால் அதன் பின்னர் பவர் பிளேயில் 50 ரன்களை விட்டுக் கொடுத்துவிட்டோம். இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments