மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக கே.எல். ராகுலுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 37வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ அணி 168 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 132 ரன்களை மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆடிய லக்னோ அணி வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது அவர்களின் போட்டி ஊதியத்தில் 25 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்புத் தொடரில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக கே.எல் ராகுலுக்கு இரண்டாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதே தவறு இன்னொருமுறை நடைபெற்றால், கே.எல் ராகுல் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுவார். மேலும், அவருக்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தொடரும் சோகம் - 8-வது போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் தோல்வி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments