Advertisement

ஜோர்டனுக்கு கடைசி ஓவரை வழங்கியது ஏன்? - சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா விளக்கம்

புனே: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவர்கிறிஸ் ஜோர்டனுக்கு வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் சென்னைசூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி யின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா.

ஐபிஎல் டி 20 தொடரில் நேற்றுமுன்தினம் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை அணி 5-வது தோல்வியை பெற்றுள்ளது. 170 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 48 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் கிறிஸ் ஜோர்டன் வீசிய 18-வது ஓவரில் 25 ரன்களை வாரி வழங்கினார். இதில் ரஷித் கான் 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments