Advertisement

IPL 2022 | த்ரில்.. த்ரில்.. த்ரில்.. சஹால் சுழலில் வீழ்ந்த கொல்கத்தா அணி

218 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இன்று ஓப்பனிங் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட்டது. வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக சுனில் நரேன், ஆரோன் பின்ச் உடன் தொடக்க வீரராக களம்புகுந்தார். இந்த மாற்றம் கைகொடுக்கவில்லை. ஆட்டத்தின் முதல் பந்திலேயே நரேனை ஹெட்மேயர் ரன் அவுட் மூலமாக வெளியேற கொல்கத்தா அணி அதிர்ச்சியை சந்தித்தது. எனினும், அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், ஆரோன் பின்ச் உடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். இருவரும் அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டுக்கு அனுப்பினர்.

இதனால் அணியின் ஸ்கோர் 7 ஓவர்களில் 70 ரன்களை தாண்டி சென்றது. விரைவாக 100 ரன்களையும் சேர்த்தனர். 9வது ஓவரின் கடைசி பந்தில் தான் இந்தக் கூட்டணி பிரிந்தது. 58 ரன்கள் எடுத்த ஆரோன் பின்ச் பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட் ஆகி வெளியேறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments