Advertisement

IPL 2022 | பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் சென்னை தோல்வி

நடப்பு ஐபிஎல் சீசனின் 11-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா, பவுலிங் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை எடுத்தது. அந்த அணிக்காக தவான் 33 ரன்கள் சேர்த்தார். லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். ஜிதேஷ் ஷர்மா 26 ரன்கள் எடுத்தார். சென்னை அணி மொத்தம் 13 வொய்ட் (Wide) வீசியிருந்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை அணி விரட்டியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments