Advertisement

IPL 2022 | ’ஹாட்ரிக் தோல்வியில் சிஎஸ்கே... ரெய்னா இல்லாததே காரணம்’ - இது ரசிகர்களின் சென்டிமென்ட்

நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் மூன்று போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியபோது பனிப்பொழிவுதான் காரணம் என சொல்லப்பட்டது. ஆனால், மூன்றாவது போட்டியில் சென்னை அணி இரண்டாவதாக பேட் செய்து ஆட்டத்தை இழந்தது.

இந்நிலையில், அதற்கு என்ன காரணம் என ரசிகர்கள் பலரும் பல கோணங்களில் காரணம் சொல்லி வருகின்றனர். சென்னை அணி பெரும்பாலும் இது மாதிரியான தொடர் தோல்விகளை சந்தித்தது இல்லை. ஒரே ஒரு முறை மட்டும் சென்னை அணி முதல் சுற்றோடு தொடரை விட்டு வெளியேறி இருந்தது. அது கடந்த 2020 சீசனில் நடந்தது. அமீரகத்தில் நடைபெற்ற அந்த சீசனில் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பி இருந்தார் சுரேஷ் ரெய்னா. அந்த சீசன் முழுவதும் அவர் விளையாடவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments