Advertisement

IPL 2022 | ஆட்டநாயகன் விருதை அக்சர் படேல் உடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் - டெல்லி வீரர் குல்தீப் யாதவ்

மும்பை: தனக்கு கொடுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை சக வீரர் அக்சர் படேல் உடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார் டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 32-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. குறிப்பாக டெல்லி வீரர் குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. அவர், 4 ஓவர்கள் வீசி 24 ரன்களை கொடுத்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments