Advertisement

'என்னையே பார்ப்பதுபோல் உள்ளது' -யுவராஜ் சிங் புகழ்ந்த இளம் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

அபிஷேக் ஷர்மாவின் ஆட்டத்தை புகழ்ந்துள்ள யுவராஜ் சிங், அவரை பார்க்கும்போது என்னையே பார்ப்பதுபோல் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிவரும் இளம் வீரரான அபிஷேக் ஷர்மா பேட்டிங்கில் அதிரடியாக ரன் குவித்து வருகிறார். இந்த சீசனில் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள அபிஷேக் ஷர்மா 331 ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 75 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார்.

image

இந்த நிலையில் அபிஷேக் ஷர்மாவின் ஆட்டத்தை புகழ்ந்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், அவரை பார்க்கும்போது என்னையே பார்ப்பதுபோல் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில், ''21 வயதான அபிஷேக் ஷர்மாவை பார்க்கும்போது என்னையே பார்ப்பதுபோல் இருக்கிறது. அவர் அடிக்கும் புல் ஷாட், பேக்ஃபுட் ஷாட் மலைக்க வைக்கிறது. ஷிவம் துபேவும் அதேபோல் சிறப்பாக விளையாடுகிறார் என்றாலும் அவர் இதனைச் செய்ய நீண்டகாலம் எடுத்திருக்கிறார். தற்போது 28 வயதாகும் ஷிவம் துபே எத்தனை ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர்கள் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்று யுவராஜ் சிங் கூறினார்.

இதையும் படிக்கலாம்: தொடர்ச்சியாக 4-வது வெற்றி: புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது லக்னோ

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments