Advertisement

கரோனா தொற்று காரணமாக சீனாவில் நடைபெற இருந்த ஆசிய விளையாட்டு ஒத்திவைப்பு

தாஷ்கண்ட்: சீனாவின் ஹாங்சோ நகரில் வரும் செப். 10 முதல் 25-ம் தேதி வரை ஆசிய விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையே கடந்த சில வாரங்களாக ஷாங்காய் நகரில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறுவதில் நிச்சயமற்ற நிலை நிலவி வந்தது.

இந்நிலையில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் நிர்வாகக் குழு தாஷ்கண்ட்டில் நேற்று கூடி, சீனாவில் நிலவி வரும் சூழல் குறித்து விவாதித்தது. இதில் ஆசிய விளையாட்டு போட்டியை காலவரையின்றி ஒத்திவைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments