Advertisement

தேசிய உயரம் தாண்டுதல் போட்டியில் வ.உ.சி. கல்லூரி மாணவிக்கு வெண்கலப் பதக்கம்

தூத்துக்குடி: தேசிய அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவி சஹானா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

பெடரேஷன் கோப்பைக்கான 20 வயதுக்கு உட்பட்ட 20-வது தேசிய அளவிலான போட்டிகள் குஜராத்தில் உள்ள சோட்டா பாய் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில், உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி வஉசி கல்லூரி ஆங்கில இலக்கியம் முதலாமாண்டு மாணவி சஹானா 1.64 மீட்டர் உயரம் தாண்டி இந்திய அளவில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments