Advertisement

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

பாகு: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே, ஆஷி சவுக்சி ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.

அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் கலப்பு அணிகளுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே, ஆஷி சவுக்சி ஜோடி 16-12 என்ற கணக்கில் உக்ரைனின் செர்ஹி குலிஷ், தரியா டைகோவா ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இந்தத் தொடரில் இந்தியா கைப்பற்றிய 2-வது தங்கப் பதக்கம் இதுவாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments