Advertisement

இலங்கைக்கு எதிரான டி20 போட்டி: 81 ரன்களில் சுருண்ட இந்தியா

தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெறும் 81 ரன்களை மட்டுமே 20 ஓவர்களில் எடுத்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 

ஆட்டத்தின் முதல் ஓவர் தொடங்கி அடுத்தடுத்து சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துள்ளது. இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இந்தியாவுக்காக குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் மட்டுமே இரட்டி இலக்கத்தில் ரன் குவித்தனர். இந்த போட்டியில் இலங்கை வெற்றி பெற 82 ரன்கள் தேவைப்படுகிறது.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments