Advertisement

இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு: 3 மாதத்தில் 2-வது வீரர்


இலங்கை அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இசுரு உதானா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இன்று திடீரென அறிவித்துள்ளார்.

12 ஆண்டுகளாக இலங்கை அணியில் ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடி வந்தபோதிலும் உதானாவுக்கு போதுமான வாய்ப்புகளை வாரியம் வழங்கவில்லை. இதுவரை 21 ஒருநாள் போட்டிகல், 35 டி20 போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்டுகளை மட்டும்தான் உதானா வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 78 ரன்களும், டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 84 ரன்களையும் உதானா சேர்த்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments