Advertisement

காயமடைந்த வீரர்களுக்கு மாற்று: இங்கிலாந்து பறக்கவுள்ள 3 வீரர்கள்

காயமடைந்த வீரர்களுக்கு மாற்றாக பிருத்வி ஷா, சூரியகுமார் யாதவ் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோர் விரைவில் இங்கிலாந்துக்கு பறக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக கடந்த ஜூன் மாதமே கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்றிருந்தது.

இந்நிலையில் அணியில் இடம் பெற்றிருந்த சுப்மன் கில், ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்களுக்கு பயிற்சி ஆட்டத்தில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர்களுக்கு மாற்றாக பிருத்வி ஷா, சூரியகுமார் யாதவ் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோர் விரைவில் இங்கிலாந்துக்கு பறக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

இதனை இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. தற்போது இலங்கைக்கு எதிரான தொடரில், இந்திய அணியில் பிருத்வி ஷா மற்றும் சூரியகுமார் யாதவ் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

டி20 தொடர் முடிந்த பிறகு அவர்கள் இலங்கையில் இருந்து நேரடியாக இங்கிலாந்து பயணிப்பார்கள் எனத் தெரிகிறது. டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பை முதல் முறையாக பெற்றுள்ளார் சூரியகுமார் யாதவ்.

துணைக் கேப்டன் ரகானே முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகமாக இருக்கிறது. அவருக்கு மாற்றாக கே.எல்.ராகுல் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments