Advertisement

ஒலிம்பிக்: 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில், இந்திய வீராங்கனைகளான அஞ்சும், தேஜஸ்வினி ஆகியோர் தோல்வியடைந்தனர்.

ஒலிம்பிக்கில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவுக்கான போட்டி இன்று நடைபெற்றது. அதில் இந்திய வீராங்கனைகளான அஞ்சும் மவுத்கில், தேஜஸ்வினி சாவந்த் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதில் இருவரும்  15 மற்றும் 33 ஆவது இடங்களை பிடித்து தோல்வியை தழுவினர்.

image

இதன் காரணமாக 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனது. டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலின் பல்வேறு பிரிவுகளில் இந்தியா இம்முறை தொடர் தோல்விகளையே சந்தித்து வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments