டோக்கியோ ஒலிம்பிக் தடகள விளையாட்டுப் பிரிவில், குண்டு எறிதல் விளையாட்டில் இந்தியா சார்பாக பங்கேற்ற 26 வயதான வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் தகுதிச் சுற்றில் பதிமூன்றாவது இடம் பிடித்து வெளியேறி உள்ளார்.
இதன் மூலம் பதக்கம் வெல்வதற்கான சுற்றில் பங்கேற்று விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் இவர்.
முதல் முயற்சியில் 19.99 மீட்டர் தூரம் குண்டை எறிய முடிந்த அவரின் அதற்கடுத்த இரண்டு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments