Advertisement

இந்தியக் குழி பிட்ச்சுகளுக்கு பதிலடி க்ரீன்டாப்தான்: பழி தீர்க்கும் மனநிலையில் ஆன்டர்ஸன்

இந்தியாவில் இந்திய அணி அவர்களுக்குச் சாதகமான பிட்ச்சுகளை அமைத்தது. நாங்கள் எங்களுக்குச் சாதகமான க்ரீன்டாப் பிட்ச்சுகளை அமைக்கிறோம். இந்திய வீரர்கள் எந்தப் புகாரும் செய்யமாட்டார்கள் என நம்புகிறேன் என்று இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் பேசியுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை சவுத்தாம்டனில் தொடங்குகிறது. இந்த முறை முதல் டெஸ்ட் போட்டிக்கே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை இங்கிலாந்து வாரியம் அமைத்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன் பிசிசிஐ வாரியம் ஆடுகளம் குறித்து வெளியிட்ட புகைப்படத்தில் அதிகமான புற்கள் காணப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments