இந்தியாவில் இந்திய அணி அவர்களுக்குச் சாதகமான பிட்ச்சுகளை அமைத்தது. நாங்கள் எங்களுக்குச் சாதகமான க்ரீன்டாப் பிட்ச்சுகளை அமைக்கிறோம். இந்திய வீரர்கள் எந்தப் புகாரும் செய்யமாட்டார்கள் என நம்புகிறேன் என்று இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் பேசியுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை சவுத்தாம்டனில் தொடங்குகிறது. இந்த முறை முதல் டெஸ்ட் போட்டிக்கே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை இங்கிலாந்து வாரியம் அமைத்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன் பிசிசிஐ வாரியம் ஆடுகளம் குறித்து வெளியிட்ட புகைப்படத்தில் அதிகமான புற்கள் காணப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime
0 Comments