ஒலிம்பிக் மகளிர் கோல்ஃப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அஷோக் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் நிறைவு பெற உள்ளது. இதில் தற்போது நடைபெற்று வரும் மகளிருக்கான கோல்ஃப் தனிநபர் போட்டியில் மொத்தம் 4 சுற்றுகள் நடைபெறும். இதில் 3-வது சுற்று நிறைவில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் 201 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தார்.
இன்று காலை அதிதி அசோக் பங்கேற்ற 4-வது சுற்று போட்டி தொடங்கியது. அப்போது மழை குறுக்கீட்டால் போட்டி பாதிக்கப்பட்டது. மோசமான வானிலையால் போட்டி நிறுத்தப்படும் முன்பாக மூன்றாவது இடத்தில் அதிதி அசோக் இருந்தார்.
இந்த நிலையில் தனிநபர் ஸ்ட்ரோக் ப்ளே பிரிவு போட்டியில் அதிதி அசோக் நான்காவது இடம் பிடித்து தோல்வியடைந்தார். இப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை நெல்லி கோர்டா முதலிடம் பிடித்தார். அதிதி அசோக்குக்கு பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தோல்வியடைந்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் கோல்ஃப்பில் இந்தியர்கள் யாரும் இதுவரை பதக்கம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments