Advertisement

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கவுரவித்து நிதியுதவி: சிஎஸ்கே அணி புதிய முயற்சி

தமிழக அணிக்காக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கவுரவித்து அவர்களுக்கு நிதியுதவி வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கடந்த 85 ஆண்டுகளாக தமிழகத்திலிருந்து ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் உருவாகியுள்ளனர். ஏராளமான கிரிக்கெட் வீரர்களை இந்திய அணிக்குத் தமிழகம் தந்து மிகப்பெரிய அடித்தளத்தை உருவாக்கத் துணை புரிந்துள்ளது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த தமிழக அணிக்காக முன்பு கிரிக்கெட் விளையாடிய 50 முதல் 60 வயதைக் கடந்த பலர் இன்று பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments