
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஓவல் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதனால் இந்தியா முதலில் பேட் செய்கிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்றுள்ளன.

ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டி தொடரின் நான்காவது போட்டி. இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறும் நோக்கில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்.
இந்தியா
ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், டேவிட் மாலன், ஜோ ரூட் (கேப்டன்), போப், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஓவர்டன், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்
இங்கிலாந்து
ரோகித் ஷர்மா, கே.எல். ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் மீண்டும் இந்த தொடரில் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை. அவர் அணியில் சேர்க்கப்படாதது விவாதங்களை எழுப்பியுள்ளது.
இதையும் படிக்கலாம் : பாராலிம்பிக்: பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் அரையிறுதிக்கு தகுதி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments