Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருடன் நிறைவு பெறுகிறது. 

image

டிராவிட், அணியின் தலைமை பயிற்சியாளராக இந்தியாவில் நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முதல் அவர் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிராவிட் 2016 - 19 வரையில் இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி மற்றும் இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். அண்மையில் கூட இந்தியா - இலங்கை மோதிய ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடைக்கால பயிற்சியாளராக அந்த பொறுப்பை டிராவிட் கவனித்திருந்தார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments