Advertisement

இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட்: 11.30 மணிக்கு 'டாஸ்', 12 மணிக்கு போட்டி தொடக்கம்

மைதானத்தில் நிலவும் ஈரப்பதம் காரணமாக 9 மணிக்கு போடப்பட வேண்டிய டாஸ் தாமதமாகியுள்ளது.
 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு போட்டி துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால், போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 9 மணிக்கு போடப்பட வேண்டிய டாஸ் தாமதமாகியுள்ளது.
 
image
இந்நிலையில் 11.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு போட்டி பகல் 12 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments