Advertisement

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் : துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் கே.எல்.ராகுல்

புகைப்படம் : பிசிசிஐ

தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. 

image

முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரோகித் ஷர்மா நியமிக்கப்பட்டு இருந்தார். காயம் காரணமாக அவர் டெஸ்ட் தொடரை விட்டு வெளியேறியுள்ள நிலையில் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய டெஸ்ட் அணி விவரம்!

விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ரஹானே, புஜாரா, ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சல், ஷ்ரேயஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகமது சிராஜ், தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி மற்றும் ஜெயந்த் யாதவ்.  

இதையும் படிக்கலாம் : 'கிரிக்'கெத்து 14 : சச்சின் டெண்டுல்கரின் டாப் 5 ஒருநாள் இன்னிங்ஸ்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments