Advertisement

தென் ஆப்பிரிக்கா : முதல் பயிற்சி செஷனை முடித்த இந்திய டெஸ்ட் அணி - போட்டோவை பகிர்ந்த கோலி!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. வரும் 26-ஆம் தேதி இந்தியா, செஞ்சூரியனில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு ஆயத்தமாகும் வகையில் இந்திய அணி வீரர்கள் இன்று முதல் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். 

 

இந்த நிலையில் முதல் பயிற்சி செஷனை முடித்த சக இந்திய அணி வீரர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை சமூக வலைதளமான ‘KOO’-வில் பகிர்ந்துள்ளார் கோலி. அதில் முதல் செஷனை முடித்தோம் என கோலி தெரிவித்துள்ளார். 

கோலி பகிர்ந்துள்ள போட்டோவில் உமேஷ் யாதவ், முகமது சிராஜ், இஷாந்த் ஷர்மா, ஜெயந்த் யாதவ், அஷ்வின் மற்றும் புஜாரா உள்ளனர். 

இந்த டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ரோகித் ஷர்மா விலகி உள்ளார். அடுத்த சில வாரங்களில் அவர் காயத்திலிருந்து தேறி ஒருநாள் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாம் : 'கிரிக்'கெத்து 14 : சச்சின் டெண்டுல்கரின் டாப் 5 ஒருநாள் இன்னிங்ஸ்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments