Advertisement

2வது டெஸ்ட்; இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் ஜோகன்னஸ்பர்க் நகரின் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடின. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1 - 1 என சமனில் உள்ளது. 

image

இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எல்கர் பொறுப்புடன் விளையாடினார். ரன் குவிக்க கடினமான ஆடுகளமாக பார்க்கப்பட்ட இந்த மைதானத்தில் தனது மொத்த திறனையும் வெளிப்படுத்தி 188 பந்துகளில் 96 ரன்களை குவித்தார். அவரது அட்டகாசமான இன்னிங்ஸ்தான் அந்த அணி வெற்றி வாகை சூட காரணம். 67.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா. இந்த போட்டியில் அந்த அணிக்கு இந்தியா 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தது. 

வரும் 11-ஆம் தேதி இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி கேப்டவுன் நகரில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments