Advertisement

தடுப்பூசி செலுத்தாவிட்டால் விளைவுகளை சந்திக்கத் தான் வேண்டும்: ஜோகோவிச் விவகாரத்தில் நடால் கருத்து

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், ஆஸ்திரேலிய அரசும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்றிரவு மெல்போர்ன் விமான நிலையம் வந்த நோவாக் ஜோக்கோவிச் விசா ரத்து செய்யப்பட்டது. அவர், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததே இதற்குக் காரணம். ஏற்கெனவே பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் தேசத்தின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஜோகோவிச், பிடிவாதமாக நீதிமன்றத்தை நாடியுள்ளார். மருத்துவ விலக்கு பெற்று ஆஸ்திரேலிய ஒபன் டென்னில் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் 9 முறை ஆஸி ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச் உறுதியாக உள்ளார். அவருக்கு நிகழ்ந்த சம்பவத்தை அவருடைய செர்பிய நாடு தனிப்பட்ட அவமானமாகக் கருதி ஆஸ்திரேலியாவுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments