Advertisement

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட்போட்டி இன்று பிற்பகலில் ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

முதல் டெஸ்டில் கே.எல்.ராகுல்,மயங்க் அகர்வால் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தனர். அதேபோல் பந்து வீச்சில் முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ்சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு உதவினர். இந்திய அணியில் அதிகமாற்றம் இருக்க வாய்ப்பில்லை. எனினும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கே முற்றிலுமாக சாதகமாகஇருக்கும் என்பதால் அஸ்வினுக்குபதில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த வகையில் உமேஷ் யாதவ் இடம் பெறக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments