Advertisement

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு கோலி மீது அழுத்தம்: முன்னாள் வீரர் குற்றச்சாட்டு

கடந்த சில மாதங்களாக விராட் கோலி மீது அழுத்தம் இருந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அதுல் வாசன் தெரிவித்துள்ளார்.

நான்கே மாதங்களில் இந்தியாவின் அனைத்து வடிவிலான கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்புகளில் இருந்தும் விராட் கோலி விலகியுள்ளார். முதலில் செப்டம்பர் மாதம் நடந்த உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்தார். அதற்கடுத்த சில நாட்களிலேயே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் அணியின் கேப்டன் பதவியையும் துறந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments