Advertisement

பிறந்த குழந்தை இழந்த சோகம் - கடினமான சூழலிலும் ரஞ்சியில் சதமடித்த விஷ்ணுவின் உத்வேகம்

புவனேஷ்வர்: தனது குழந்தையை சில நாட்கள் முன் இழந்த சோகத்துக்கு மத்தியிலும் பரோடா கிரிக்கெட் அணி வீரர் விஷ்ணு சோலங்கி ரஞ்சி டிராபியில் சதம் அடித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வழக்கம்போல இந்த ஆண்டும் ரஞ்சி டிராபி பலம் இளம் திறமைகளை அடையாளம் காட்டி வருகிறது. அந்த வகையில் இந்த ரஞ்சி சீசனில் கவனிக்கவைத்தவர் இளம்வீரர் விஷ்ணு சோலங்கி. பரோடா அணியைச் சேர்ந்த விஷ்ணு, சண்டிகர் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் செஞ்சுரி அடித்து அசத்தினார். அவரின் செஞ்சுரி உதவியால் பரோடா அணி 398 ரன்கள் எடுத்து 230 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஐந்தாவது வரிசை வீரராக களமிறங்கிய விஷ்ணு 161 பந்துகள் சந்தித்து 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments