Advertisement

ஜேசன் ராய்க்கு பதிலாக ஆப்கன் வீரர் - பிசிசிஐ ஒப்புதலுக்கு காத்திருக்கும் குஜராத் டைட்டன்ஸ்

அகமதாபாத்: வரவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு பதிலாக ஆப்கன் வீரர் ரஹ்மமுல்லா குர்பாஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இதற்காக பிசிசிஐக்கு குஜராத் அணி நிர்வாகம் ஒப்புதல் கோரி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் புதிதாக இடம்பெற்றுள்ள அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இரண்டும் மார்ச் 28-ம் தேதி முதல்முறையாக எதிர்கொள்கின்றன. இதற்கான தீவிரப் பயிற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுபட தொடங்கியுள்ள நிலையில், சில தினங்கள் முன் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 'தொடர்ச்சியாக பயோ - பப்புள் பாதுகாப்பில் விளையாடி வருவதால் மன அயர்ச்சி ஏற்பட்டுள்ள இந்த சூழலில் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும்' என்று கூறி இந்த ஐபிஎல் சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments