Advertisement

ஆல் இங்கிலாந்து பாட்மின்டன்: இந்திய வீரர்கள் அசத்தல்

ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு இளம் வீரா் லக்ஷயா சென், இரட்டையா் பிரிவில் சாத்விக்-சிராக் ஷெட்டி, ட்ரீஸா ஜோலி-காயத்ரி கோபிச்சந்த் தகுதி பெற்றனா்.

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (வியாழக்கிழமை) நடந்த  ஆடவா் மூன்றாம் சுற்றில் இந்திய இளம் நட்சத்திரம் லக்ஷயா சென், 21-16, 21-18 என்ற புள்ளிக் கணக்கில் உலகின் மூன்றாம் நிலை வீரரரும், உலக சாம்பியன்ஷிப்பில் 2 முறை பதக்கம் வென்றவருமான டென்மாா்க்கின் ஆன்டாஸ் அன்டோன்சென்னை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.

image

இரட்டையா் ஆடவா் பிரிவில் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி,  ஜெர்மனி ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றனா். மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தோனேசியாவின் கிரெஸியா-ரஹாயு இணை காயத்தால் வெளியேறிய நிலையில், இந்தியாவின் காயத்ரி கோபிச்சந்த் - ட்ரீஸா காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

மகளிா் ஒற்றையா் பிரிவு இரண்டாம் சுற்றில் சாய்னா நெவால், நடப்பு சாம்பியன் அகேன் எமகுச்சியிடம் தோல்வியடைந்தாா். பி.வி. சிந்து, டகாஹஷியிடம் தோல்வியடைந்து வெளியேறினாா்.

இதையும் படிக்கலாம்: “என் செஞ்சுரியைவிட அவரது அந்த 18 டாட் பந்துகள்தான் முக்கியமானது” - ரிஸ்வானின் பெருந்தன்மை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments