Advertisement

'‘எப்படி நடந்துகொள்வது என தெரியவில்லை’' - ரோஹித் பாராட்டு குறித்து அஸ்வின்

பெங்களூரு: முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வினை 'ஆல் டைம் கிரேட் வீரர்' என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் மொஹாலி மைதானத்தில் நடந்தது. இதில் இலங்கை அணியை இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு ரவிச்சந்திரன் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் மிக முக்கிய பங்காற்றியிருந்தனர். இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது இந்திய வீரர் புதிய சாதனை படைத்தார். கபில்தேவின் சாதனையை முறியடித்த அவரை, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா வெகுவாக பாராட்டினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments