Advertisement

IPL 2022 அணி அலசல் | தரமான ஆல் ரவுண்டர்கள், டாப் ஆர்டர் அச்சம் - புதிய பயணத்தில் லக்னோ எப்படி?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மற்ற சீசன்களை விட, வரவிருக்கும் சீசன் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியிருப்பதற்கு புதிதாக இரண்டு அணிகள் இணைந்துள்ளதும் காரணம். இரண்டு அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை கே.எல்.ராகுல் வழிநடத்த உள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிற்கு ஐபிஎல் என்பது புதியது கிடையாது. 2016-ல் சூதாட்ட புகாரில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் நீக்கப்பட்டபோது இரண்டாண்டுகள் புனே அணியை நிர்வகித்தது அவர்தான். இப்போது நிரந்தமரக ஐபிஎல்லின் ஓர் அங்கமாக மாறும் பொருட்டு லக்னோ அணியை வாங்கியுள்ளார்.

ஏலத்தில் எப்படி செயல்பட்டது? - ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒரு ரூபாயை கூட மிச்சம் வைக்காமல் வீரர்களை வாங்கி குவித்த அணி என்றால், அது லக்னோ மட்டுமே. அந்த அளவுக்கு மிக துல்லியமாக, தெளிவுடன் வீரர்களை வாங்கியது. ஏலத்துக்கு முன்பாகவே கே.எல்.ராகுலை கேப்டனாக அறிவித்து அவரை ஒப்பந்தம் செய்த லக்னோ நிர்வாகம், அவருடன் மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரவி பிஷ்னோய் இருவரையும் ஒப்பந்தம் செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments