Advertisement

ஐபிஎல் 2022: ஆர்சிபி பவுலிங் தேர்வு - ஹாட்ரிக் வெற்றிபெறுமா ராஜஸ்தான்?

15-வது சீசன் ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற அணி ஆர்சிபி அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது 12 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், வான்கடே மைதானத்தில் 13-வது சூப்பர் லீக் போட்டி நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூபிளெசிஸ், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது. 

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அதன் முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வி கண்டது. எனினும், அடுத்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதையடுத்து, தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

image

இதேபோல் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன் தொடக்க லீக் ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தையும், அதற்கு அடுத்த ஆட்டத்தில் வலுவான மும்பையை 23 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி கம்பீரமாக வீறுநடை போடுகிறது. இதனால் தனது ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது.

ராஜஸ்தான் அணி வீரர்கள்:

ஜோஸ் பட்லர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஹெட்மையர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஸ்வின், நவ்தீப் சைனி, ட்ரென்ட் போல்ட், சாஹல், பிரசித் கிருஷ்ணா.

ஆர்சிபி அணி வீரர்கள்:

ஃபாஃப் டூபிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராத் கோலி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ருதர்போர்ட், அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லே, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments