Advertisement

IPL 2022 | பட்லரின் சிக்ஸர்ஸ் ஷோ, ராஜஸ்தான் நிதான ஆட்டம் - பெங்களூரு அணிக்கு 170 ரன்கள் இலக்கு

மும்பை: மும்பையில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரூ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கும் இடையிலான ஐபிஎல் ஆட்டத்தின் 13-வது லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர், யஸஷ்வி ஜெய்ஸ்வால் இணை துவக்கம் கொடுத்தது. பொறுமையாக ஆட்டத்தை தொடங்கிய இந்த இணையை 2-வது ஓவரில் டேவிட் வில்லே பிரித்தார். அவர் வீசிய பந்து யஸஷ்வி ஜெய்ஸ்வாலை கடந்து ஸ்டம்பை பதம் பார்த்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments