Advertisement

இலங்கை நெருக்கடி | சங்ககாரா டூ ஜெயவர்த்தனே; ரியாக்ட் செய்த கிரிக்கெட் வீரர்கள்

கொழும்பு: தீவு தேசமான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. உணவு, எரிபொருள் மாதிரியானவற்றுக்கு அந்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் போராட்டம் அங்கு வெடித்துள்ளது. இலங்கை அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது. இருந்தாலும் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தங்களது பதவியிலிருந்து விலகாமல் உள்ளனர். இத்தகைய சூழலில் இலங்கை நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நாட்டில் நிலவும் சூழல் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். முன்னாள் கேப்டன்கள் குமார் சங்ககாரா, ஜெயவர்த்தனே மற்றும் தற்போதைய இலங்கை அணியில் விளையாடி வரும் பனுகா ராஜபக்சே, வனிந்து ஹசரங்கா ஆகியோர் இதில் அடங்குவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments