நடப்பு ஐபிஎல் சீசனில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இருந்தாலும் இந்தத் தொடர் தோல்விகளுக்கு மத்தியிலும் ஒரே ஒரு ஆறுதலாக அமைந்துள்ளது சிஎஸ்கே விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியின் ஆட்டம். முதல் இரண்டு போட்டிகளில் அவரது பேட் பேசி இருந்தது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரது விக்கெட் கீப்பிங் திறன் பேசியிருந்தது. ஸ்டம்புகளுக்கு பின்னால் விக்கெட் கீப்பராக நிற்கும் தோனியின் செயல்பாடு மின்னல் வேகத்தில் இருக்கும். அது ஸ்டம்பிங் ஆனாலும் சரி, டைவ் அடித்து கேட்ச் பிடிப்பதானாலும் சரி, ரன் அவுட் செய்வதானாலும் சரி. அதனால் அவர் விக்கெட் கீப்பிங் பணியை கவனிக்கும்போது பேட்ஸ்மேன்கள் க்ரீஸ் லைனில் நிற்கிறோமோ என்பதில் ஒரு கண் வைத்துக் கொண்டே இருப்பார்கள். இருந்தாலும் தோனி வசம் அவர்கள் விக்கெட்டுகளை இழப்பதுண்டு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime
0 Comments