Advertisement

ஐபிஎல் சீசனில் நீண்ட பங்களிப்பை வழங்குவார் ஷாபாஸ் அகமது: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் நம்பிக்கை

மும்பை: ஷாபாஸ் அகமது இந்த ஐபிஎல் சீசனில் நீண்ட அளவிலான பங்களிப்பை வழங்குவார் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

170 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு கடைசி 7 ஓவர்களில் 82 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் ஷாபாஸ் அகமது 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments