Advertisement

திறன் படைத்த தமிழகத்தின் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க பத்ரிநாத் திட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சுப்ரமணியம் பத்ரிநாத், திறன் படைத்த தமிழகத்தின் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளார்.

“மொபைல் போன் துணையுடன் இன்று உலகை நம்மால் அணுக முடிகிறது. கிரிக்கெட் விளையாட்டிலும் தொழில்நுட்பம் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இத்தகைய சூழலில் தொழில்நுட்பத்தின் ஊடாக திறன் படைத்த கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காண உள்ளேன். அவர்களுக்கு பயிற்சி கொடுக்க உள்ளேன். நான் இதனை எனது சொந்த செலவில் முன்னெடுத்துள்ளேன். இது வணிகம் சார்ந்த முயற்சி அல்ல. நம் மாநில கிரிக்கெட்டுக்கு என்னால் முடிந்ததை செய்ய விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார் பத்ரிநாத்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments