Advertisement

மத்தியப் பிரதேச அரசிடம் உதவி கோரும் ஸ்பெஷல் ஒலிம்பிக் வீராங்கனை சீதா சாகு

ரேவா: ஸ்பெஷல் ஒலிம்பிக் விளையாட்டில் பதக்கம் வென்ற வீராங்கனை சீதா சாகு (Sita Sahu) தனது வாழ்வாதாரத்திற்காக மத்தியப் பிரதேச மாநில அரசிடம் உதவி கோரியுள்ளார். இவர், கடந்த 2011ல் ஏதென்ஸ் ஸ்பெஷல் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்றவர்.

'ஸ்பெஷல் ஒலிம்பிக்' என்பது, குறிப்பிட்ட சில வகையான மூளைத்திறன் சவால் கொண்ட குழந்தைகள், பெரியவர்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் சர்வதேச விளையாட்டுப் போட்டியாகும். இந்தப் போட்டியில் இரண்டு பதக்கம் வென்ற சீதா சாகு, தற்போது தனது வாழ்வாதாரத்திற்காக தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகிறார் .



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments