Advertisement

ஜூன் 23-ல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் தொடக்கம்: கோவையில் ஜூலை 31-ல் இறுதிப் போட்டி

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடர் வரும் 23-ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறது. ஜூலை 31-ஆம் தேதி வரையில் தொடர் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி முதன்முறையாக கோவையில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎல் தலைமை செயல் அதிகாரி பிரசன்னா கண்ணன் கோவையில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் தெரிவித்தது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் 6-வது டிஎன்பிஎல் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்கி ஜூலை 31-ம் தேதி வரை திருநெல்வேலி, திண்டுக்கல் (நத்தம்), கோவை மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments