Advertisement

அவர் டிகே. டெயில் எண்டர் கிடையாது - கடைசி ஓவரில் சிங்கிள் மறுத்த பாண்டியாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

சென்னை: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கடைசி ஓவரில் ஸ்ட்ரைக்கில் இருந்த ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் உடன் விளையாடிய போது சிங்கிள் கொடுக்க மறுத்தார். அதனை கவனித்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதற்கு எதிராக தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. டாஸை இழந்து முதலில் பேட் செய்த இந்தியா 211 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா போன்ற பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்காக அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments