Advertisement

நார்வே செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் ஆனந்த்

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரில் கிளாசிக்கல் பிரிவில் 5-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பினார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.

நார்வே நாட்டின் ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் தனது 5-வது சுற்றில் நேற்று உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 40-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க கடைப்பிடிக்கப்பட்ட ‘சடன் டெத்’ ஆட்டத்தில் விஸ்வநாதன் ஆனந்த் 50-வது நகர்த்தலின் போது கார்ல்சனை வீழ்த்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments