Advertisement

தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி நடைபெறுகிறது.
 
image
இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத ஒரே நாடு தென் ஆப்பிரிக்கா தான். ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி அசத்திய இந்திய அணி தென்ஆப்பிரிக்க மண்ணிலும் மோசமான வரலாற்றை மாற்றி காட்டுமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments